ஹைதராபாத், டிச.19: தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இயற்கைச் சீற்றங்களால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக சந்திரபாபு நாயுடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.மதிமுக பொதுச்செயலர் வைகோ, அதிமுக எம்பி செம்மலை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உண்ணாவிரத முகாமுக்கு இன்று பிற்பகல் வந்து சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.திரைப்பட நடிகர் நந்தமூரி கல்யாணராம், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உண்ணாவிரத முகாமுக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.ஆதரவு தெரிவித்து ஜெயலலிதா அனுப்பிய செய்தியை செம்மலை எம்பி உண்ணாவிரத முகாமில் வாசித்தார். விவசாயிகளுக்கு உடனடியாக போதிய இழப்பீடு தர வேண்டும் என வைகோவும் வலியுறுத்தினார்.
--
Thanks & Regards
Sasikumar.T
Sr.Software Engineer, Impelsys India Private Limited,
Bangalore.
Mobile:+919740632323.
Sunday, December 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment